தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுந்தரவேல்புரம் பகுதியில் மழை காரணமாக தேங்கியிருந்த நீரை அகற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மழைநீர் தேக்கம் குறித்து பொதுமக்கள் தெரிவித்த தகவலினைப் தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.

அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மழை நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டனர். மேலும், சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் எதிர்காலத்திற்கான நிரந்தர தீர்வுகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பகுதி மக்களுடன் பேசி அவர்களது தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்த அமைச்சர், அவற்றை தீர்க்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.