நாட்டின் விடுதலைக்காக தனது உயிரையும் அர்ப்பணித்த தியாகத் தலைவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 89-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் R. அருணாதேவி ரமேஷ்பாண்டியன் அவரின் தியாகச் செயல்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி ஒட்டப்பிடாரத்தில் பிறந்து, வழக்கறிஞரான பின்னரும் சுதேசிப் போராட்ட வீரராக உயர்ந்து, கப்பலோட்டிய முதல் தமிழராக வரலாற்றில் இடம்பிடித்தவர் வ.உ.சி. அவர்களைப் பற்றி நினைவுகூர்ந்த அவர், தமிழ்மீதும் தேசமீதும் கொண்ட அவரின் அசைக்க முடியாத பற்றையைப் பாராட்டினார்.

ஆங்கிலேயர்களின் கொடுமைக்கு கோவை சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுத்து துன்புறுத்தப்பட்டு, அங்கு வீரமரணமடைந்த வ.உ.சி. அவர்களின் தியாகம் தமிழகத்திற்கும் தேசத்திற்கும் என்றென்றும் தலைநிமிரச் செய்வதாகவும் கூறினார்.

“அன்னாரின் 89-ஆம் ஆண்டு நினைவு நாளில் என் மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்து, என்றும் மக்கள் பணியில் இருப்பேன்,” என வழக்கறிஞர் R. அருணாதேவி ரமேஷ்பாண்டியன் அவர்கள் தெரிவித்தார்.