கரூரில் கடந்த 25.11.2025 அன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் “பசுமையும் பாரம்பரியமும்” என்ற தலைப்பில் 3 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்காக நடைபெற்ற கலைத் திருவிழாவில், நாட்டுப்புற நடனம் பிரிவில் போட்டியிட்ட தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள், மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் மாநில அளவில் இரண்டாம் இடம் என இரு பெரும் சாதனையைப் பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து இன்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் அவர்களை மாணவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி, உதவி தலைமையாசிரியை மலர்விழி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, பாக முகவர் முத்துப்பாண்டி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.