தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனையடுத்து தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் வடக்கு மாவட்டத்தின் 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெறும் SIR பணி மற்றும் கட்சி வளர்ச்சி பணிகளை மதிப்பாய்வு செய்தார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் பின்னர் விடுபட்ட வாக்காளர்களை முழுமையாக சேர்க்கும் பணியே உண்மையான களப்பணியின் அடையாளம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளர் பெருமாள், கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், சின்னப்பாண்டியன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, இம்மானுவேல் உள்ளிட்ட நகரம், ஒன்றியம், பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.