தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து, மாநகராட்சி ரோச் பூங்காவிற்கு எதிர்ப்புறம் உள்ள எக்கோ பார்க்கில் செயல்பட்டு வரும் படகு குழாமை பண்டிகை காலங்களை முன்னிட்டு மேலும் தரம் உயர்த்தி அமைப்பதற்கான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்பெறும் வகையில் படகு சேவைகளை மேம்படுத்த தேவையான வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப உடனிருந்தார்.