தூத்துக்குடி நகரில் சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69வது நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜேக்கப் தேவதாஸ் அபிசேக், மாநில ஒருங்கிணைப்பாளர் இசக்கித்துரை, மாவட்ட தொகுதி பொறுப்பாளர் ராஜசேகர் ஆகியோர் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மண்டலச் செயலாளர் ஜெயசீலன், இளைஞர் பாசறை அமைப்பாளர் முத்துக்குமார், வழக்கறிஞர் பாசறை அமைப்பாளர் ரமேஷ்குமார், அன்னலட்சுமி, தமிழ் நேயன், மாரிமுத்து, செல்லப்பா, வடிவேல், தாமஸ், ஜலாலுதீன், சேகர், சகாயம், பாக்கியராஜ், சுப்புராம் செல்லத்துரை, விஜய், ராஜேஸ்குமார், துரைசிங், முருகன், அந்தோணி தாமஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.