ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் நாகம்பட்டியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு மருத்துவ அட்டைகளை வழங்கினார்.

முகாமில் கோவில்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் வித்யா விஸ்வநாதன், மருத்துவ அலுவலர் ராம்ஜி, ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவஹர், சசிக்குமார், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ், எப்போதும் வென்றான் சோலைசாமி, திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் விநாயகம், கிளைச் செயலாளர்கள் ஸ்ரீனிவாசன், கணேசன், பெருமாள்சாமி, இளைஞர் அணி முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.