முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வடக்கு காலங்கரையில் தாட்கோ – நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கிராம அறிவு மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்வில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

முன்னதாக சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெனிஷிஸ் ஷியா, செயற்பொறியாளர் மீனாட்சிசுந்தரம், ஒப்பந்தக்காரர் ஸ்ரீராமர், கிளை செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் மற்றும் பல கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.