தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 2ம் கேட் அருகிலுள்ள தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதியில் அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளின் முன்னேற்றத்தை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தெப்பக்குளத்தை சுற்றியுள்ள நடைபாதை, விளையாட்டு வசதிகள், பசுமை வளர்ப்பு, விளக்குகள் அமைப்பு உள்ளிட்ட பணிகள் திட்டமிட்டு நடைபெறுகின்றன.

ஆய்வில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் பல கழக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

மக்கள் ஓய்வெடுத்து சுகமாகச் செலவிடக்கூடிய பசுமை பூங்காவாக தெப்பக்குளம் மாறும் நாள் தூரத்தில் இல்லை என மேயர் தெரிவித்தார்.