தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். உடன் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பொதுமக்கள் நலனுக்கான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதோடு, தூத்துக்குடி நகர வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனையும் நடைபெற்றது. மாநகரின் அடிப்படை வசதிகள், தூய்மை, குடிநீர், சாலை மற்றும் வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களில் விரிவான விவாதம் நடைபெற்றது.

மேலும், மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான உத்தரவுகளும் வழங்கப்பட்டன.

இந்த மாமன்றக் கூட்டம், தூத்துக்குடி மக்களின் நலனையும் நகரின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்தும் வகையில் சிறப்பாக முடிவடைந்தது.