கரூர் மாவட்டத்தில் நடிகர் விஜயின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் குறித்து, அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யாததற்கு கடும் கேள்வி எழுப்பியுள்ளார் சீட்டாவின் நிறுவனர் மற்றும் அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மேன் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு பாபு.
அவர் தெரிவித்ததாவது:
அப்பாவி மக்களின் உயிரை காவுகொண்ட இந்த சம்பவம், திட்டமிட்ட முறையில் நிகழ்த்தப்பட்ட கொலை.
கூட்டத்திற்கு நெருக்கடியான இடத்தை திட்டமிட்டு ஒதுக்கி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியும் கூட்டம் நடத்த அனுமதி அளித்தது அதிகாரிகளின் கடமையின்மை.
கூட்ட நெரிசலில் அதிக மக்கள் கூடுவதை முன்கூட்டியே அறிந்தும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
மின்சாரத்தை துண்டித்து கலவரம் தூண்டி, பொதுமக்களை சிக்கவைத்து உயிரிழக்கச் செய்தது ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்று நாட்டின் கண்ணியத்தை குலைத்துள்ளது.
எனவே, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர், மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மின்சார வாரிய பொறியாளர்கள் உள்ளிட்டோர் அனைவரையும் குற்றவாளிகளாக அறிவித்து கைது செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மேலும், இந்த பரிந்துரையை மத்திய உள்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் அனுப்பியுள்ளதாகவும் பாபு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
“கரூர் பொதுக்கூட்ட பலி – ஜாலியன் வாலாபாக் படுகொலையை மீட்ட சம்பவம்; பொறுப்பாளர்களை கைது செய்யாதது ஏன்?” – லஞ்ச ஒழிப்பு பாபு கேள்வி?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றக் கூட்டம் – மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது!!
அடுத்த
“கரூர் துயரத்தில் முதல்வர் ஸ்டாலின் எண்ணத்தை செயலாக்கிய கனிமொழி – கடமை உணர்வின் முன்னுதாரணம்”
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026