தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, பத்திரிகையாளர்களின் நலனில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும் வரலாற்றுச் செயல்களுக்கிடையே ஓய்வு பெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு தலா மாதம் ரூ.12,000 ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்பட்டிருப்பது பத்திரிகைத் துறையையே மகிழ்வில் ஆழ்த்தியுள்ளது.

பத்திரிகைத் துறையின் தியாகத்திற்கான அரசு அங்கீகாரம்

அன்றாடம் பகலும் இரவும் பாராது இயங்கும் பத்திரிகையாளர்கள் புயல், வெள்ளம், விபத்து, நோய்ப்பரவல் போன்ற அனைத்து பேரிடர்களிலும் உயிர் உந்தி செயல்படும் முன்களப் பணியாளர்கள். அவர்களின் இந்த அர்ப்பணிப்பை மதித்து, தமிழ்நாட்டில் முதன்முறையாக பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்கள் என அறிவித்ததும், தனி நலவாரியம் அமைத்ததும் முதல்வர் ஸ்டாலின் அரசு.

2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பத்திரிகையாளர் நலவாரியத்தில் இதுவரை 3674 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கல்வி, திருமணம், மகப்பேறு, கருச்சிதைவு, இறுதிச் சடங்கு உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

உதவித் தொகைகள் உயர்வு – பத்திரிகையாளர்களுக்கான பெரிய வெற்றி

பணிக்கொடை: ரூ.3 லட்சம் → ரூ.4 லட்சம்

மாதந்தோறும் ஓய்வூதியம்: ரூ.10,000 → ரூ.12,000

குடும்ப ஓய்வூதியம்: ரூ.5,000 → ரூ.6,000

மருத்துவ உதவி: ரூ.2 லட்சம் → ரூ.2.50 லட்சம்

இயற்கை எய்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி 2 மடங்காக உயர்வு

2021 முதல் இதுவரை:

125 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம்

27 குடும்பங்களுக்கு குடும்ப ஓய்வூதியம்

59 குடும்பங்களுக்கு ரூ.2 கோடி 9.50 லட்சம் நிதி உதவி

16 பத்திரிகையாளர்களுக்கு ரூ.30.61 லட்சம் மருத்துவ உதவி

42 பத்திரிகையாளர்களுக்கு புதிய ஓய்வூதிய ஆணைகள் – நலத் தொடர் வெற்றி

27.11.2025 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின் படி, நலிந்த நிலையில் உள்ள 42 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.12,000 ஓய்வூதிய ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வழங்கினார்.

இது மாநில பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதே நேரத்தில்… தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் 4½ ஆண்டுக் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை

பத்திரிகைத் துறைக்கான அக்கறையை மனமார பாராட்டிய தூத்துக்குடி பத்திரிகையாளர்கள், தங்களது நீண்ட நாள்—4½ ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கையை முதல்வர் கவனத்தில் கொண்டு விரைவாக நிறைவேற்றுமாறு குரல் கொடுக்கின்றனர்.

“பத்திரிகைத் துறைக்காக செய்யப்படும் ஒவ்வொரு திட்டத்துக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களது கோரிக்கையும் நீண்டநாள் தாமதத்திற்கு பின் நிறைவேறும் என நம்புகிறோம்…” என தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.