தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மேற்கு காமராஜர் நகர், கணேசபுரம், ஜாஹிர் உசைன் நகர் வடக்கு தெரு, ஜாஹிர் உசைன் நகர் ஹௌசிங் போர்டு, சிலுவைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கியுள்ளது.

இந்நிலையில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று நிலைமைப் பார்வை மேற்கொண்டார். மழைநீரை உடனடியாக வெளியேற்ற மின் மோட்டார் இயங்குமுறை பணிகளை வேகப்படுத்தவும், அதிகளவு தேங்கியுள்ள பகுதிகளில் நீர் வெளியேற்றத்தை விரைவுபடுத்தவும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன், பள்ளமாக உள்ள சாலைகளில் சரள் அடிக்கும் மேம்பாட்டு பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.

உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ஆர். கணேசன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பிளோமின்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சேவியர், கிளை செயலாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.