கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நோயாளிகளையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

விளாத்திகுளம் வட்டம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூக்காண்டி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் சந்தித்த எம்.எல்.ஏ மார்கண்டேயன், மருத்துவர்களிடம் அவருக்கான சிகிச்சை குறித்து கேட்டறிந்து அவருக்கு ஆறுதல் கூறினார். உடன் கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அத்துடன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் கசவன்குன்று பகுதியைச் சேர்ந்த முன்னாள் திமுக கிளைச் செயலாளர் கருப்பசாமியின் மகன் கருப்பசாமி சிகிச்சை பெற்று வருகிறார். அவரையும் எம்.எல்.ஏ சென்று சந்தித்து நலம் விசாரித்து தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் வழங்கப்படுவதாக உறுதி அளித்தார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் ஆகியோர் இணைந்திருந்தனர்.

இருவரும் விரைவில் குணமடைய ஏற்கனவே மருத்துவமனை சார்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்தார்.