தென்குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக பதிவாகியுள்ள கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றை ஒட்டிய பகுதிகளில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், இன்று (24.11.2025) தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்–முக்காணி சந்திப்பு பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தரைப்பாலம் அருகே நீர்மட்டம் மற்றும் நீரேற்ற நிலைமை குறித்து அதிகாரிகளிடமிருந்து தகவல் அறிந்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு அவர் உத்தரவிட்டார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, பல்வேறு அரசு துறை அதிகாரிகள் ஆகியோர் இந்நேரில் உடனிருந்தனர்.