தென்குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக பதிவாகியுள்ள கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றை ஒட்டிய பகுதிகளில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், இன்று (24.11.2025) தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்–முக்காணி சந்திப்பு பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தரைப்பாலம் அருகே நீர்மட்டம் மற்றும் நீரேற்ற நிலைமை குறித்து அதிகாரிகளிடமிருந்து தகவல் அறிந்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு அவர் உத்தரவிட்டார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, பல்வேறு அரசு துறை அதிகாரிகள் ஆகியோர் இந்நேரில் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்! ஆத்தூர்–முக்காணி சந்திப்பில் நிலைமையை நேரில் கண்காணித்த கனிமொழி கருணாநிதி எம்பி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வெள்ளநீர் சூழ்ந்த ஏரல் தரைப்பாலம்: பாதிப்பை நேரில் மதிப்பீடு செய்த எம்.பி. கனிமொழி!!
அடுத்த
“KKM கல்குவாரி காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட கிராமச் சாலைகள் நாசம் – மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு மக்கள் நல இயக்கத் தலைவர் சாமு காந்தி மனு”
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026