கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த துயரத்தில் பங்கெடுத்து உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையேற்றார். மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், ஐசன் சில்வா, செந்தூரப்பாண்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அதேபோல், ஐஎன்டியூசி மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், விவசாய பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மரிய ஆல்வின், சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் மைதீன், ஊடகப் பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், ஊடகப் பிரிவு மாநில செயலாளர் முத்துமணி, மகளிர் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவி முத்துவிஜயா, அமைப்புசாரா மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி மேரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும், மாவட்ட துணைத் தலைவர்கள் ஏ.டி. பிரபாகரன், மார்க்கஸ், அருணாச்சலம், மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில் பிரபாகர், செயலாளர்கள் கோபால், அந்தோணி ஜெயராஜ், வார்டு தலைவர்கள் முத்துராஜ், சரஸ்வதி நாதன், மகேந்திரன், கருப்பசாமி, சீனிவாசன், மாரியப்பன், வெள்ளையன், அங்குசாமி, பெனடிக், சிமியோன், ராஜரத்தினம், ஜேம்ஸ், அந்தோணிசாமி, ஜான்சன், ஜெயபிரகாஷ், இசக்கி ராஜா, முருகசங்கர் மற்றும் பலரும் பங்கேற்று உயிரிழந்தோரின் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தினர்.

உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நிகழ்வில், "மனித உயிர் எந்த அரசியல் பாகுபாட்டையும் கடந்து நிற்கிறது" எனக் கூறிய காங்கிரஸ் நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.