கரூர் மாவட்டத்தில் நடிகர் விஜய் தலைமையிலான பொதுக்கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இச்சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு இயக்கத் தலைவர் பி.பாபு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில், “கரூரில் நடந்தது சாதாரண விபத்து என்று சொல்ல மனமில்லை. இது இந்தியாவின் இரண்டாம் ஜாலியன் வாலாபாக் படுகொலை. இதற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து,
“இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இருந்தாலும் அவர்கள் ஆன்மா இறைவனடி சேர்ந்து இளைப்பாற வேண்டும். இறைவன் அவர்களின் குடும்பங்களுக்கு வலிமையும் ஆறுதலும் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.