தூத்துக்குடி அண்ணா (பழைய) பேருந்து நிலையத்தில் போதை வாலிபர்களின் அத்துமீறல் அதிகரித்து, பொதுமக்கள் தினசரி சிரமப்படுகின்றனர். நடைபாதைகளில் கடைகள் ஆக்கிரமிப்பு செய்திருப்பது ஒரு புறம் இருந்தாலும், மது போதையில் சுற்றித் திரியும் இளைஞர்கள் மக்கள் இயக்கத்தையே பாதித்து வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை இன்று இரண்டு பேர் கடும் போதையில் பேருந்து நிலையத்தின் நடுப்பகுதியில் படுத்துக் கிடந்து, எழுந்து பெண்கள் உட்பட பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததால் பலர் அச்சத்துடன் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறினர். இந்த நேரத்தில் காவல்துறையோ, பேருந்து நிலைய பாதுகாப்பு (காவலாளி) பணியாளர்களோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

“இந்த நிலை தினமும் தொடர்கிறது; உடனடி நடவடிக்கை அவசியம்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.