செய்துங்கநல்லூர் அருகிலுள்ள நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம் நடைபெற்றது.

திருக்குறள் கண்காணிப்புக்குழு உறுப்பினர் மற்றும் பயிலரங்க குழுத் தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். எழுத்தாளர் மாரிமுத்து வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

முனைவர் கந்தசுப்பு பயிற்சியாளராகவும், கோபாலகிருஷ்ணன், அஸ்வரனிஹா ஆகியோர் பேச்சாளர்களாகவும் கலந்துகொண்டனர். பயிற்சியில் சிறப்பாகப் பதிலளித்த ராஜேஷ், ஸ்ரீநித்திஸ், ஐசக், ராகசுபா, வேலரசி, பூர்ணசிவானி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் மகாலட்சுமி, தனலெட்சுமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவில் ஆசிரியை டெமி அருள்டா நன்றி கூறினார்.