திங்கட்கிழமையான இன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட சமக மாவட்ட செயலாளர் மாலைச்சூடி அற்புதராஜ் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் சூசைமுத்து அருள்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட மகளிர் அணி தலைவி சந்திரா, மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் சின்னத்துரை, மற்றும் முருகன், சுந்தர் ஆகியோருடன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :-
திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம் செல்லும் ரோட்டில் திருச்செந்தூரில் இருந்து 3 கிலோ மீட்டரில் ராமசாமிபுரம் மற்றும் முத்துநகர் என்ற ஊர்கள் உள்ளது.
அங்கு சுமார் 200 வீடுகள் உள்ளது. சுமார் 800 பேர் வசிக்கின்றனர். அங்கு செந்தில் குமரன் எனும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. ராமசாமிபுரத்தில் படிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கும், பொதுமக்கள் மருத்துவமனைக்கும், மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும், அரசு அலுவலகங்கள் சென்று வருவதற்கும் திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம், திசையன்விளை, நாகர்கோவில், திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர்.
அவர்கள் சென்று வரக்கூடிய ராமசாமிபுரம் பஸ் நிறுத்தத்தில் செல்லும் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் மற்றும் திசையன்விளை பேருந்துகள் நிற்பதில்லை கேட்டால் இந்த இடம் அரசு பேருந்துகள் நிறுத்தும் ஸ்டாப் கிடையாது.
ஆகவே நிறுத்த மாட்டோம் என்று கூறி பொதுமக்களை ஏற்றி புறக்கணிக்கிறார்கள் ராமசாமிபுரம் மற்றும் முத்துநகர் மற்றும் நாகர்கோவில் திசையன்விளை செல்ல வேண்டி உள்ளது.
மக்கள் சாத்தான்குளம் சென்று வர வேண்டும் என்றால் திருச்செந்தூர் சென்று பஸ் பிடித்து மீண்டும் அந்த ஊரை கடந்து தான் செல்ல வேண்டி உள்ளது. இதனால் மிகுந்த காலவிரயம் மற்றும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
ஆகவே தாங்கள் தயவுகூர்ந்து பொதுமக்கள் வசதிக்காக ராமசாமிபுரம் பேருந்து நிறுத்ததில் அனைத்து அரசு பேருந்துகளும் நின்று பொதுமக்களை ஏற்றி இறக்கி செல்ல நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். என்று சமக சார்பில் கேட்டு கொள்கிறோம் என்று அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
திருச்செந்தூர் ராமசாமிபுரம் கிராமத்தில் அரசு பேருந்து நின்று செல்ல வேண்டி ஆட்சியரிடத்தில் சமக மனு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம்!!
அடுத்த
ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட விசிக சார்பில் வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026