தூத்துக்குடி, நவம்பர் 10:
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கடந்த நவம்பர் 6ஆம் தேதி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த ஐந்து தமிழக தொழிலாளர்கள் ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தப்பட்டவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பி. பொன்னுதுரை (41), எஸ். புதியவன் (52), எம். பேச்சிமுத்து (42) ஆகியோரும், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிராஜா (36), தளபதி சுரேஷ் (26) ஆகியோரும் ஆவர். இவர்கள் மாலி மின்மயமாக்கல் திட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது சமூக வலைத்தளப் பதிவில் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.
அதில், “மாலியில் கடத்தப்பட்ட தூத்துக்குடி மற்றும் தென்காசியைச் சேர்ந்த ஐந்து தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும். அவர்களை மீட்டு இந்தியாவிற்கு திரும்பச் செய்யும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும், கடத்தப்பட்ட தொழிலாளர்கள் நலமுடன் உள்ளார்களா என்பதை உறுதிசெய்ய இந்திய தூதரகம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி
மாலியில் கடத்தப்பட்ட ஐந்து தமிழர்களை மீட்க வெளியுறவுத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி கருணாநிதி எம்.பி வலியுறுத்தல்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி கிரேன் உரிமையாளர்கள் சங்கத் தேர்தலில் சுயம்புலிங்கம் வெற்றி!!
அடுத்த
சங்கரப்பநாயக்கன்பட்டியில் ரூ.17.10 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் பணிகள் தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026