தூத்துக்குடி, நவம்பர் 10:
தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று (நவம்பர் 9) நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் நியமன தலைவராக சுயம்புலிங்கம் இருந்தார். இம்முறை நடைபெற்ற தேர்தலில் அவர் மீண்டும் தலைமைப் பொறுப்பிற்காக போட்டியிட்டார்.

மொத்தம் 83 வாக்குகளில் 81 வாக்குகள் பதிவான நிலையில், சுயம்புலிங்கம் 56 வாக்குகள் பெற்று, எதிரணி வேட்பாளர் விஜயை விட 31 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். விஜய் 25 வாக்குகள் பெற்றதாக தேர்தல் அலுவலர்கள் பார்த்தசாரதி, முரளி, மற்றும் கண்காணிப்பாளர் வழக்கறிஞர் கலைச்செல்வி முன்னிலையில் எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு, அமைதியான முறையில் நிறைவு பெற்றது. வெற்றி பெற்ற பின்னர் சுயம்புலிங்கம் தெரிவித்ததில், “கிரேன் உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட்டு, அவர்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவேன்” என கூறினார்.