தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து (பழைய பேருந்து) நிலையம் வளாகத்தில் இன்று (21.03.2025) காலை உப்பு சர்க்கரை கரைசலை (ORS)  பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.

வெப்பத்தினால் ஏற்படும் உடல் சோர்வினை கட்டுப்படுத்தவும், வயிற்றுப்போக்கை விரைவில் குணப்படுத்தவும், இந்த உப்பு சர்க்கரை கரைசல் பெரிதும் பயன்படுகிறது. கடுமையான கோடை வெயிலிலிருந்து, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு போன்ற நோய்களில் இருந்து விடுபட இந்த உப்பு சர்க்கரை கரைசலை பொதுமக்கள் பயண்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மண்டல தலைவர், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி சுகாதார குழு தலைவர், முன்னாள் கவுன்சிலர், மாநகர் நல அலுவலர்,  மேயரின் உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.