தூத்துக்குடி பாத்திமா நகர் மணல்மேட்டில் பாதுகாவலி புனித பாத்திமா அன்னையின் ஆலய பெருவிழா வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது.

திருக்கொடியேற்றம் 03.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது. தொடர்ந்து,

நற்கருணை பணி : 05.10.2025 (ஞாயிற்றுக்கிழமை)

மாலை ஆராதனை : 12.10.2025 (ஞாயிற்றுக்கிழமை)

பெருவிழா திருவிழா : 13.10.2025 (திங்கட்கிழமை)

என்ற வகையில் விழாக்கள் நடைபெற உள்ளன.

“யாரிவாள்! வைகறைபோல் தோற்றம் திங்களைப்போல் அழகு; ஞாயிறுபோல்; போரணிபோல் வியப்பாகவும்; யாரிவள்!” என்ற ஆன்மிகப் பாடலுடன் விழா சிறப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளை தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் அவர்கள் திருப்பலி மற்றும் ஆன்மீக வழிநடத்தலுடன் நடத்துகிறார்.

அழைப்பாளர் : அருட்பணி ஜேசுதாஸ் பர்னாந்து (பங்குத்தந்தை)
ஒழுங்கமைப்பில் : அருட்பணி வின்சென்ட் (உதவி பங்குத்தந்தை)

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் – அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், ஊர் நலக்கமிட்டியினர், பங்கு இறைமக்கள், பாத்திமா நகர்.