அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கழகத் தலைவர் C. கோபால் (முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில், வருகின்ற 05.01.2026 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் தஞ்சாவூர் மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், எதிர்கால செயல் திட்டங்கள், அமைப்பு ரீதியான பணிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழுடன் தவறாமல் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுமென, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

“தமிழகம் தலைநிமிரட்டும்; தமிழர் வாழ்வு மலரட்டும்” என்ற இலக்குடன் கழகம் தொடர்ந்து பயணித்து வருவதாகவும், இந்த கூட்டம் முக்கிய தீர்மானங்களுக்கு அடித்தளமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.