தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் கமிட்டி (INTUC) சார்பாக, பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், சமீபத்தில் கோவையில் இடம்பெற்ற கூட்டு பாலியல் வன்முறை சம்பவத்தையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் கடுமையாகக் கண்டித்தும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் வரும் 7ஆம் தேதி நவம்பர் 2025, மாலை 5 மணிக்கு தூத்துக்குடி VVD சிக்னல் அருகில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும், சமூகத்தில் பெண்களின் மரியாதை மற்றும் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினரும், தொழிற்சங்க காங்கிரஸ் உறுப்பினர்களும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
பெண்கள் மீது வன்முறை நிகழ்வுகள் தடுக்கப்பட்டு, பாதுகாப்பான சமூகம் உருவாக வேண்டும் என்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவன்,
பெருமாள் சாமி கதிர்வேல்
மாநில பொதுக்குழு உறுப்பினர் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
மாநில பொதுச் செயலாளர் – தமிழ்நாடு INTUC
தூத்துக்குடி
பெண்கள் பாதுகாப்பே நோக்கம் – தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி மாபெரும் கண்டனக் குரல் எழுப்புகிறது!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“பசுமை தமிழ்நாட்டுக்காக புதிய சட்டம் அவசியம்!” — முதலமைச்சருக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் எஸ்.ஜே. கென்னடியின் கோரிக்கை!!
அடுத்த
தூத்துக்குடி அன்னை தெரசா நகர், ராஜீவ் நகர் பகுதிகளில் புதிய வடிகால் பணிகள் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!விசாரணை
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026