தூத்துக்குடி (டூ) திருநெல்வேலி புதுக்கோட்டை பைப்பாஸ் புறவழிச் சாலை பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, பொதுமக்களின் தாகம் தீர்க்க மரம் வரம் அறக்கட்டளை மற்றும் சத்யா மஹால் நிர்வாகத்தினர்  இணைந்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் சத்யா மஹால் நிர்வாகிகள் மந்திரம், கோமு, இசக்கி, மரம் வரம் அறக்கட்டளை சவேரியார் புரம் செல்வம், முன்னாள் வார்டு உறுப்பினர் சண்முகசுந்தரம்,  இசக்கி துரை, மற்றும் அடைக்கலம் ஆட்டோ சங்க உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அய்யனார் காலனி பெருமாள், மரம் வரம் ராமன் ஆகியோர் இணைந்து சிறப்பாக  செய்திருந்தனர்.

முன்னதாக பொது மக்களுக்கான தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு அனைவருக்கும் பிஸ்கட் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.