தென்காசி இந்துமுன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு, அவரது இல்லத்தில் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சி, தூத்துக்குடி இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் K.S. ராகவேந்திரா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தென்காசி மாவட்ட துணைத் தலைவர் இசக்கிமுத்து, நெல்லை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் இராமசெல்வராஜ், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் M. சுடலை, தூத்துக்குடி இந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கவி சண்முகம் உள்ளிட்ட இந்துமுன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் பேசிய நிர்வாகிகள், குமார்பாண்டியன் அவர்கள் இந்துமுன்னணி இயக்க வளர்ச்சிக்கும் சமூக பணிகளுக்கும் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து, அவரது நினைவு என்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தனர்.