புரட்சி பாரதம் கட்சியின் மாநில அளவிலான முக்கிய நிர்வாக மாற்றமாக, கட்சியின் மாநில முதன்மை செயலாளர் டி. ருசேந்திரகுமார், மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் இளம் புரட்சியாளர் பூவை ஜெகன் மூர்த்தியார் அறிவித்துள்ளார். கட்சியின் வளர்ச்சிக்கும், பொதுமக்கள் நலனுக்குமான பணிகளில் ஆற்றல் செலுத்தி வரும் டி. ருசேந்திரகுமார், கட்சியின் அனைத்து நிலைகளிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் மா. மாரிச் செல்வம் “புதியதாக மாநில பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள டி. ருசேந்திரகுமார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். அவர் பணி சிறக்கட்டும். கட்சியின் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் புதிய திசைமாற்றத்தை உருவாக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.