தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜபிள்ளை சந்தில் புதிய சாலை அமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு பணியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டு நிலைமைகளை விரிவாக ஆய்வு செய்தனர்.

பகுதி மக்கள் வசதிக்காக விரைவில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.