தூத்துக்குடியில் அற்புதம் மருத்துவமனை சார்பில் வருகிற 29ஆம் தேதி சனிக்கிழமை தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனை சார்பில், "எதற்கு எடுத்தாலும் தற்கொலை செய்து கொள்வது சரியான முடிவா? என்பதை பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் வருகின்ற 29.03.2025 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு முத்தையாபுரம், கே.டி.கோசல்ராம் உயர்நிலைப் பள்ளியில்  விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கு சாண்டி கல்விக்குழுமம் துணை சேர்மன் எஸ்பி சாண்டி தலைமை வகிக்கிறார். பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் மான்சிங், உடற்கல்வி ஆசிரியர் சத்திய சங்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றன. மன நல மருத்துவர் டாக்டர் சீனிவாசன் ஆலோசனை வழங்குகிறார். இதில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் எந்த வேலை இருந்தாலும் அன்று ஒரு நாள் மட்டும் ஒத்தி வைத்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அற்புதம் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.