தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பி&டி காலனி பகுதியில் கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய துரித நடவடிக்கை உத்தரவின்படி பணிகளின் விரைவு செயல்பாட்டை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பகுதியில் நீர்நிலை, வெளியேற்ற மின் மோட்டார் செயல்பாடு, வடிகால் பாதை போன்றவற்றை ஆய்வு செய்து தேவையான கூடுதல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அவருடன் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். மழையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாநகராட்சி தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.