தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசின் அலீம்கோ நிறுவனம் இணைந்து ஒருங்கிணைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் தேர்வு முகாம் நாளை (29.11.2025 – சனிக்கிழமை) போல்பேட்டை பகுதியில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களுக்கு தேவையான சாதனங்களை பெற விண்ணப்பிக்கலாம்.
உடல் இயக்க குறைபாடு, 100% பார்வை குறைபாடு, தொழுநோய், மூளை முடக்குவாதம், செவித்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட மாற்றுத்திறன்களை கொண்டவர்கள் அனைவரும் இந்த தேர்வு முகாமில் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த முகாமை முன்னெடுத்து வரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் P. கீதாஜீவன் M.Com., B.Ed., தெரிவித்ததாவது: “மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவி உபகரணங்களை பெற இந்த முகாம் பெரும் வாய்ப்பாக இருக்கும். அனைத்து பயனாளிகளும் தவறாமல் பங்கேற்று பயன்பெற வேண்டும்,” என்றார்.
மேலும், முகாமிற்கு வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்காக தனிப்பட்ட உதவியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் 9789265909 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவையான வழிகாட்டுதலை பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
முகாமிற்கு செல்ல முடியாதவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு — போல்பேட்டை கீதா மெட்ரிக் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் தேர்வு முகாம் நாளை!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதா ஜீவன் – வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு அவசர வேண்டுகோள்!!
அடுத்த
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ அவசர வேண்டுகோள்: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு உடனடி செயல்பாடு அவசியம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026