சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் மிகவும் குறைவாக உள்ள நிலையில், பொதுமக்கள் உடனடியாக தேவையான படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டுமென சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தாமதமானால் பின்னர் அது சிக்கலாகிவிடும் என்பதால், இந்த அவசரத்தை உணர்ந்து அனைவரும் விரைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

வாக்குரிமை என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என்பதால், உரிமை பெறுவதில் யாரும் பின்தங்காமல் உடனடியாக விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தினார்.