தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழையையொட்டி, நான்காம் கேட் பகுதியில் வடிகால்களில் மழை நீர் வெளியேற்ற நிலையை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதேபோல் மேட்டுபட்டி மற்றும் சங்கு குளி கடற்கரை பகுதிகளிலும் மழை நீர் வெளியேற்றப் பணிகள் எந்த தடங்கலும் இன்றி நடைபெறுகின்றனவா என்பதையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மலராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.