ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் T. குமாரகிரி, கிழக்குத் தெருவில் ரூ. 21.69 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, அ. குமரெட்டியாபுரம் மேற்குத் தெருவில் ரூ. 5.78லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, தெற்கு வீரபாண்டியபுரம் கிழக்குத் தெருவில் ரூ. 6.50 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், ஒன்றிய பொறியாளர் காயத்ரி, மேற்பார்வையாளர் கலை அழகன், வருவாய் ஆய்வாளர் ஶ்ரீரங்கபெருமாள், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவள்ளி ஒப்பந்தகாரர்கள் எல்.கே. முருகன், ஜெகதீஷ், ஊராட்சி செயலர், வீரபாண்டி அசோக் அ. குமரெட்டியாபுரம் மொட்டைய சாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.