தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முடிவைத்தானேந்தல் ஊராட்சி கிராமத்திற்கு மீனாட்சிபட்டி குடிநீர் வடிகால் வாரிய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து முடிவைத்தானேந்தல் தர்மகிணறு வரை 15 வது மத்திய நிதி குழுமம் திட்டத்தில் கீழ் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பைப் லைன் அமைக்கும் பணியினை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோர்ட் ராஜா, ஒன்றிய பொறியாளர் பிரான்சிஸ்கோ, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஜெயஜோதி, தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் புதூர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் முடிவை பா. ஆறுமுகம், பால கிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அபிராமி, ஆறுமுகம், ஒன்றிய துணை செயலாளர் நாராயணன் மாவட்ட பிரதிநிதி கணேசன், சிவலூர் மாரி செல்வம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் R.J. வசந்த், பரியெரும் பெருமாள், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி, கிளைச் செயலாளர்கள் ராஜா, முத்துராஜா, சங்கரநாராயணன், செல்வராணி,
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரம்யா, வீரமாகாளி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.