ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் அகிலாண்டபுரம் ஊராட்சி அகிலாண்டபுரம் கிராம மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பாஞ்சாலங்குறிச்சியில் கிராமத்தில் ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தனர். இந்நிலையில் அகிலாண்டபுரம் கிராம மக்கள் எங்களது கிராமத்தில் ரேஷன் கிளைக் கடை அமைத்து தர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையாவிடம் கோரிக்கை வைத்தனர்.

உடனே மக்களின் கோரிக்கையை ஏற்று அகிலாண்டபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைப்பதற்கான நடவடிக்கை  மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து இன்றைய தினம் புதிய நியாய விலை கடையினை அகிலாண்டபுரம் கிராமத்தில் செயல்படும் வகையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்  எம்.சி. சண்முகையா கிளை ரேசன் கடையை துவக்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் அறிவழகன், செயலாட்சியர் சுடலைமணி, கூட்டுறவு சார்பதிவாளர் ரேச்சல்,  கூட்டுறவு சங்க செயலாளர் மாரிமுத்து, கிளை செயலாளர் கருப்பசாமி, ஊராட்சி செயலாளர் முருகன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீரங்க பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் வீரமாமுனிவர், பணி மேற்பார்வையாளர் பரமசிவன் பாஞ்சாலங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதாகருணாநிதி, முறம்பன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி, சுடலைமணி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாடசாமி, ஆவரங்காடு கிருஷ்ணசாமி, அரசு ஒப்பந்தகாரர் முகமது,
மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.