தூத்துக்குடி டி. சவேரியார்புரம் பகுதியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைப்பதற்காக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வருகை தந்த சண்முகையா எம்எல்ஏவை அங்கன்வாடி குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து, சார் மாலை வணக்கம் என்று கூறி எம்எல்ஏ அவர்களை குழந்தைகள் வரவேற்றார்கள்.

அப்போது சண்முகையா எம்எல்ஏ கொஞ்சம் கூட யோசிக்காமல் அனைவருக்கும் மாலை வணக்கம் என்று இன்முகத்தோடு தெரிவித்ததோடு மட்டுமல்லாது, மழலைகளின் அன்பான வரவேற்பை கண்டு நெகிழ்ந்து சிறிது நேரம் அவர்களோடு உரையாடிய பிறகே புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அங்கன்வாடி கட்டிடத்தை பார்வையிட்டு கொண்டு இருக்கும் போது மழலைகளின் குறும்புத்தனமான செய்கைகளை கண்டு வியந்து மழலைகள் (அங்கன்வாடி குழந்தைகள்) செய்யும் சிறு, சிறு, குறும்புகளை பார்த்து ரசித்து கொண்டு இருந்தார். அங்கன்வாடி குழந்தைகளுக்கு சண்முகையா எம்எல்ஏ இனிப்புகள் வழங்கிய பின்னரும் மீண்டும் குழைந்தைகளோடு உரையாட தொடங்கி விட்டார்.

குழந்தைகளிடத்திலிருந்து பிரிய மனமில்லாது மீண்டும் அவர்களோடு உரையாடிய எம்எல்ஏ வின் செயல்  காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.