தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குமாரகிரி ஊராட்சி செல்வம்சிட்டி நகர் பகுதியில் 100 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.10,45,510 மதிப்பில் 100 KVA புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்காக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா இயக்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இந்நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் (ஊரகம்) திரு.சின்னத்துரை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஹைக்கோர்ட் ராஜா மின்வாரிய உதவி பொறியாளர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தலைமை கழக இளம் பேச்சாளர் சண்முக நாராயணன், ஒன்றிய துணை செயலாளர்கள் நாராயணன், ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், பரமசிவன் மற்றும் சைமன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.