கோடை காலத்தை முன்னிட்டு வெப்ப தாக்குதல் அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்டு ஆஸ்பத்திரியில் பல இடங்களில் உப்பு சர்க்கரை கரைசல் வைக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் தற்போது இல்லாத போதும் கடுமையான வெப்பத்தின் காரணமாக வைரஸ் போன்ற நோய்கள் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்றவை நேற்று முதல் துவக்கி வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

உப்பு கரைசல் வழங்கும் பணியினை கல்லூரி முதல்வர் டாக்டர் சிவக்குமார் துவக்கி வைத்தார். ஆர்.எம்.ஓ., டாக்டர் சைலஸ் ஜெபமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.