தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எட்டயபுரம் ரோடு ஹவுஸிங் போர்டு பகுதியில் பெண்களுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு வரும் மகளிர் பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெண்கள் பாதுகாப்புடன் ஓய்வெடுத்து பொழுதைக் கழிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் இந்த பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. நடைபாதை, அமர்விடங்கள், பசுமை வளம் உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் மேயர் விளக்கம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் உடன் இருந்தார். பணிகளை தரமான முறையில் விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பெண்கள் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.