தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று இரண்டு முக்கிய பொதுப்பணிகள் தொடர்பாக மனு வழங்கப்பட்டது.

புதியம்புத்தூர்–மேலமடம் கைகாட்டி சந்திப்பிலிருந்து நடுவக்குறிச்சி வரையிலான சுமார் 1 கி.மீ தூர சாலை கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பாதை சேதமடைந்துள்ளதால் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டுமென கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மற்றும் ஓட்டப்பிடாரம் உதவி கோட்டப் பொறியாளருக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதேபோல், புதியம்புத்தூர் பூங்கா அருகிலுள்ள அங்கன்வாடி – 3 மையத்தில் மின் மீட்டர் மீது மழைநீர் கசிவு ஏற்படுவது மற்றும் அருகில் டிரான்ஸ்பார்மர் இருப்பது குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது. எனவே மின் வசதிகளை சரிசெய்யவும், டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் முத்தமிழ்செல்வன் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார்.

இந்த நேரத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.