தேசமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் எனக் கூறி வாழ்ந்த தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி 3ஆம் மைல் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ வெண்கல சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி 50வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணகுமார் அவர்கள், முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

தேசியத் தலைவர், சமுதாய சீர்திருத்தவாதி, சமூக நீதி மற்றும் ஆன்மீக ஒற்றுமையின் சின்னமாக விளங்கிய முத்துராமலிங்கத் தேவரின் தியாகமும் சேவையும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருப்பதாகவும், அவரது வழிமுறைகளை பின்பற்றி சமுதாய நலனுக்காகச் செயல்படுவது தான் அவருக்கு உண்மையான மரியாதை என்றும் கவுன்சிலர் சரவணகுமார் தெரிவித்தார்.