தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கம் மற்றும் டிரஸ்ட் சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று (07.02.2026) மாலை தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ராமசாமி நாயுடு தலைமையில், டிரஸ்டி விவேகானந்தன் மற்றும் செயலாளர் ரெங்கசாமி முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற மார்ச் 19ஆம் தேதி நடைபெற உள்ள யுகாதி விழா (தெலுங்கு வருடப்பிறப்பு) தொடர்பாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, யுகாதி தினத்தன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் திருமண தகவல் பரிமாற்ற நிகழ்ச்சி, மதியம் பொதுக்குழு கூட்டம் மற்றும் மாலை யுகாதி விழாவை சிறப்பாக நடத்துவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் ரமேஷ் நாயுடு, மோஹன் நாயுடு வெங்கடகிருஷ்ணராஜன் நாயுடு, வெங்கடசுப்பிரமணியன் நாயுடு, ராஜா காந்தி நாயுடு, ஜெயக்குமார் நாயுடு, குப்புசாமி நாயுடு, என். சங்கர நாராயண நாயுடு, ஆதிநாத ஆழ்வார் நாயுடு, கே.ஆர். சுப்பிரமணியன் நாயுடு, வெங்கடேசன் நாயுடு, எஸ். சங்கர நாராயணன் நாயுடு, ஏ. சங்கரநாராயணன் நாயுடு, அங்குசாமி நாயுடு, செல்வராஜ் நாயுடு, முருகன் நாயுடு, ஏ. சங்கர நாராயணன் நாயுடு, பெருமாள் நாயுடு, நடராஜன் நாயுடு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

யுகாதி விழாவை உற்சாகமாகவும் சிறப்பாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என கூட்டத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது.