சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், ரேசன் கடைகளில் துணி பைகள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சகா கலைக் குழு தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் பணிவான வேண்டுகோளை விடுத்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், அவற்றுக்கு மாற்றாக மறுபயன்பாடு செய்யக்கூடிய துணி பைகளை பொதுமக்களிடம் பரவலாக்குவது அவசியமாகியுள்ளது. குறிப்பாக, தினசரி பயன்பாட்டில் இருக்கும் ரேசன் கடைகளில் துணி பைகள் வழங்கப்படுவதன் மூலம், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் பிளாஸ்டிக் தவிர்ப்பு பழக்கமும் அதிகரிக்கும் என சகா கலைக் குழு தெரிவித்துள்ளது.
இந்த முயற்சி கலையும் கல்வியும் இணையும் சமூக மாற்ற முயற்சியாக அமையும் என்றும், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வை வளர்க்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசு மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட்டால், இந்த சிறிய முயற்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குழுவின் நம்பிக்கையாகும்.
எனவே, பொதுமக்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரேசன் கடைகளில் துணி பைகள் வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என Dr. சகா மா. சங்கர் தலைமையிலான சகா கலைக் குழு தமிழக மற்றும் மத்திய அரசுகளை பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளது.
தூத்துக்குடி
ரேசன் கடைகளில் துணி பைகள் வழங்கல் – சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறிய முயற்சி: தமிழக மற்றும் மத்திய அரசுகளுக்கு சகா கலைக் குழுவின் பணிவான வேண்டுகோள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 2026 மெகா காலண்டர் வழங்கிய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
அடுத்த
சகா கலை குழு சார்பில் அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் – கலையும் கல்வியும் மக்களுக்கே!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026