சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், ரேசன் கடைகளில் துணி பைகள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சகா கலைக் குழு தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் பணிவான வேண்டுகோளை விடுத்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், அவற்றுக்கு மாற்றாக மறுபயன்பாடு செய்யக்கூடிய துணி பைகளை பொதுமக்களிடம் பரவலாக்குவது அவசியமாகியுள்ளது. குறிப்பாக, தினசரி பயன்பாட்டில் இருக்கும் ரேசன் கடைகளில் துணி பைகள் வழங்கப்படுவதன் மூலம், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் பிளாஸ்டிக் தவிர்ப்பு பழக்கமும் அதிகரிக்கும் என சகா கலைக் குழு தெரிவித்துள்ளது.

இந்த முயற்சி கலையும் கல்வியும் இணையும் சமூக மாற்ற முயற்சியாக அமையும் என்றும், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வை வளர்க்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசு மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட்டால், இந்த சிறிய முயற்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குழுவின் நம்பிக்கையாகும்.

எனவே, பொதுமக்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரேசன் கடைகளில் துணி பைகள் வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என Dr. சகா மா. சங்கர் தலைமையிலான சகா கலைக் குழு தமிழக மற்றும் மத்திய அரசுகளை பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளது.