தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதி — முள்ளக்காடு, முத்தையாபுரம், புல்லாவழி, பழையகாயல் பகுதிகளில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் பாரம்பரிய உப்பளத் தொழிலை அழித்து, கப்பல் கட்டும் விரிவாக்கத் தளம் அமைக்கப்பட கூடாது என வலியுறுத்தி, உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இணைந்து முத்தையாபுரம் பஜாரில் இரண்டாவது முறையாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் மந்திரமூர்த்தி, பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர், பாலசுப்பிரமணியன், ஈ.பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
உப்பளத் தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் பொன்ராஜ், பேச்சிமுத்து, பூமயில், பரமசிவன், முனியசாமி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், விவசாய சங்கம் சார்பில் ஜோதிமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மதச்சார்பற்ற ஜனதாதளம் மாநில துணைத்தலைவர் வக்கீல் சொக்கலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன், தமிழக வெற்றி கழகத்தின் ஜே.கே.ஆர். முருகன், நாம் தமிழர் கட்சியின் ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் மற்றும் அன்னலட்சுமி, ஐ.என்.டி.யு.சி. தேசிய செயலாளர் கதிர்வேல், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் ராஜேஷ், மீனவர் சங்கம் முனியசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் இணைந்து பங்கேற்றனர்.
அரசு உடனடியாக உப்பளத் தொழிலை காக்கும் நடவடிக்கைகளை எடுத்து, கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஒருமித்த கோரிக்கை வைக்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி கடலோர உப்பளத் தொழிலை காப்பாற்ற கோரி முத்தையாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"ALL CAN TRUST அமைப்பின் 220வது ‘ALL CAN FEED THE NEEDY’ உணவளிப்பு நிகழ்வு தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற்றது"
அடுத்த
ஒட்டப்பிடாரம் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ ஆய்வு – உப்பாற்று ஓடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026