ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், பூவாணி ஊராட்சியின் லட்சுமிபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13.60 லட்சம் மதிப்பில் புதிய நூலகக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்தக் கட்டிடத்தை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, திட்ட அலுவலர் (ஓய்வு) தெய்வேந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர் சுரேஷ்காந்தி, மாவட்ட விவசாய அணி தலைவர் சுப்பையா, ஊராட்சி செயலர் முருகன், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் பிரேமா, கிளை செயலாளர் சிவன், கருப்பசாமி, சந்திரன், அண்ணாமலை, ஹரி, சுடலைமாடன், கணேசன் மற்றும் பெருமளவு ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.