ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் M.C. சண்முகையா பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற திருமண விழாக்களில் கலந்து கொண்டு மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மலைப்பட்டி கிராமத்தில் முனியசாமி ITI இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து சாயர்புரம் சாராக் மஹாலில் நடைபெற்ற கட்டாலங்குளம் பால்ராஜேந்திரன் இல்ல திருமண விழாவிலும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வாகைக்குளம் ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஜட்சன் ஜோசப் செல்லத்துரை – பரிவல்லிகோட்டை ஊராட்சி செயலர் மனோகரன் இல்ல திருமண விழாவிலும் பங்கேற்றார்.

அதேபோல் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு சூர்யா திருமண மண்டபத்தில் நடைபெற்ற செல்வரமேஷ் – முப்பிடாதி திருமண விழாவிலும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதனுடன் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மேல கருங்குளம் நயினார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிவராமன் – கெளசல்யா திருமண விழாவிலும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி வாழ்வில் நலனும் செழிப்பும் பெருக வாழ்த்தினார்.

இந்த தொடர் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், உறவினர்கள், மற்றும் திமுக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.