தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் பஜாரில் செயல்பட்டு வந்த ஓபிஎஸ் அணி தொழிற்சங்கமான ஜெ.ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், கௌரவ ஆலோசகர் லோகு கணேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் அதிமுகவில் இணைந்தது.
இந்த நிகழ்ச்சி அதிமுக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான டூவிபுரம் மாநில அதிமுக வர்த்தக அணி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் தெற்கு மண்டல ஓட்டுநர்கள் அணி அவைத்தலைவர் மாரிமுத்து, தலைவர் ஆனந்த், செயலாளர் சுபாஷ், வேளாங்கண்ணி, பொருளாளர் பூண்டி செல்வம், உறுப்பினர்கள் செந்தில்குமார், மாரிமுத்து, இளையராஜா, இசக்கிராஜா உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
அனைவருக்கும் சீருடைகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், “சிறப்பாக செயல்பட்டு அதிகமான உறுப்பினர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும். இபிஎஸ் தலைமையில் கட்சி வலுவாக வளர்ந்து வருகிறது. அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்” எனக் கூறினார்.
இந்நிகழ்வு, தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் இபிஎஸ் அணியின் வலுசேர்க்கையை உறுதி செய்த முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
தூத்துக்குடி
முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் ஓபிஎஸ் அணியினர் இபிஎஸ் அணியில் இணைந்தனர்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சண்முகையா எம்எல்ஏ கீழப்பூவாணியில் பொது விநியோகக் கடை திறந்து வைத்தார்!!
அடுத்த
கரூர் கூட்ட நெரிசல் விபத்து: தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு மத்திய பாதுகாப்பு வழங்கக் மக்கள் நல இயக்கம் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026